image

வத்திக்கான் - போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி!

வத்திக்கான்,ஜூன் 27, 2025: ஜூன் 26, கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழாவின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து திருத்தந்தை வழங்கிய சிறப்புச் செய்தி ஒன்றில், “தீமையிலிருந்து விலகி நிற்பவர்கள் வழியாக கடவுள் பெரிய காரியங்களைச் செய்கிறார்” என்றும்,


அனைத்துலக இளையோரே, புதிய, நீதியான மனிதகுலத்தை உருவாக்குவதில் நீங்கள் பார்வையாளர்களாக அல்ல, தீவிர பங்கேற்பாளர்களாக இருக்க அழைப்பு விடுத்தார்.


“சுதந்திரம் என்பது ஓர் உலகளாவிய அழைப்பு” என்றும், “உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த உறவுகள் வழியாக ஒன்றிணைந்து காணப்படுகின்றன” என்றும்

“போதை மற்றும் ஓரங்கட்டப்படுதலுக்கு எதிரானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றும், “அது வலிமை வாய்ந்த குற்றவியல் வலைப்பின்னல்களையும் சமூக புறக்கணிப்பையும் எதிர்கொள்ள வேண்டும்” என்றும், “போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிரானப் போராட்டம் சவாலானது மற்றும் ஆபத்தானதும் கூட” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.


குணப்படுத்துதல், கல்வி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அதிக இடங்களை உருவாக்குவதற்கான அழைப்புபொன்றையும் விடுத்துள்ள திருத்தந்தை, அனைவரையும் தூய கன்னி மரியாவின் பராமரிப்பில் ஒப்படைத்து அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் - திருத்தந்தை பதினான்காம் லியோ


மூலம்: வத்திக்கான் செய்திகள் (Vatican News)

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP