image

திருச்சிராப்பள்ளியில் YCS/YSM மண்டல பொதுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, 27 ஜூன் 2025 — தமிழக ஆயர்கள் பேரவையின் இளைஞர் பணிக்குழுவின் பகுதியாக செயல்படும் யங் கத்தோலிக் ஸ்டூடன்ட்ஸ் (Young Catholic Students - YCS) / யங் ஸ்டூடன்ட் மூவ்மென்ட் (Young Students Movement - YSM) மண்டல பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.


நிகழ்ச்சி மேதகு ஆயர் நசரேன் அவர்கள் நடத்திய திருப்பலியுடன் தொடங்கியது. மாநில தலைவர் ஜான் ரெக்ஸ், துணை தலைவர் சிலம்பரசி இயக்கக் கொடியை ஏற்றினர். பொருளாளர் அடம்ஸ் இயக்க கீதத்தை பாடினார்; செயலாளர் லூர்து மேரி இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தார்.


முதல் அமர்வில் கடந்த ஆறு மாதங்களின் செயல்பாடு மற்றும் நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மறைமாவட்டங்களின் முன்னேற்றமும் பகிரப்பட்டது.


இரண்டாம் அமர்வில் கயல் குறும்படம் திரையிடப்பட்டது, இது ஆதரவற்ற விதவைகளுக்கு இளைஞர் உதவியின் தேவையை எடுத்துரைத்தது. பின்னர் அருள்சகோதிரி ஜெசுபாகியம் “இளைஞர் மேம்பாட்டு கல்வி செயல்முறை” தொடர்பான அனுபவத்தை பகிர்ந்து, தொடர்ந்த திட்டங்களை விளக்கினார்கள்.


மூன்றாம் அமர்வில் துளிர் குறும்படம் பெண்கள் எதிர்கொள்ளும் ஆணாதிக்க வன்முறையைப் பற்றி பேசியது. தொடர்ந்து இளைஞர் பணிக்குழு செயலாளர் அருள்தந்தை எடிசன் YCS/YSM இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கார்டினல் ஜோசப் கார்ட்ஜின் அவர்களின் சமூக சேவை மாதிரியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.


பின்னர், பங்குகள் மற்றும் பள்ளிகளில் YCS/YSM குழுக்களை உருவாக்கி செயல்படுத்துவது குறித்த குழு விவாதங்கள் நடைபெற்றன.


முடிவில், மேதகு ஆயர் நசரேன் இயக்கத்தில் முன்பு நடந்த சிறப்புகளை நினைவுபடுத்தி, இளைஞர்கள் சமூக அநீதிகளை கவனித்து கேள்வி எழுப்பி, செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்


தீர்மானங்களை வெளியிட்டு, இயக்கக் கீதம் பாடப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. மேதகு ஆயர் நசரேன் நிகழ்ச்சியின் முழுப்பகுதிகளிலும் பங்கேற்றதற்காக அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


அபிஷேக் ராஜா

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP