- 25 June, 2025
வத்திக்கான், ஜூன் 24, 2025: ஜூன் 24 அன்று புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற யூபிலி கருத்தரங்கில், உலகம் முழுவதும் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட குருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். திருத்தந்தை லியோ, “இயேசுவின் திருஇருதயமும் குருத்துவ அழைப்பும்” என்ற கருப்பொருளில் தியான உரை நிகழ்த்தினார்.
அவர் மாணவர்களை “நம்பிக்கையின் சாட்சிகள்” என அழைத்து, அவர்களின் வாழ்வில் இயேசுவின் அன்பு, கருணை, மகிழ்ச்சி போன்ற பண்புகள் பிரதிபலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தியானம் என்பது இறையியலுக்கு மட்டுமல்ல; ஆழ்ந்த ஜெபம், உள் உணர்வு, கலை, இசை, அறிவியல் ஆகியவற்றின் அழகையும் உணரும் வாழ்க்கை இருக்க வேண்டும் என்றார்.
தூய ஆவியின் துணையை நாடி, ஏழைகள் மற்றும் இளைஞர்களின் தேடல்களுக்கு செவிமடுக்க வேண்டும். பாசாங்கு இல்லாமல், மனத்தாழ்மையுடன் குருத்துவ வாழ்க்கையில் முதிர வேண்டும் எனக் கூறினார்.
மரியாதையுடன்: வத்திக்கான் செய்தி
© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP