image

விவிலியப் பணிக்குழுவின் புதிய விவிலியப் பட்டயப் பயிற்சி வகுப்பு தொடக்க

சென்னை, ஜூன் 26, 2025: சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட விவிலியப் பணிக்குழு, 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய விவிலியப் பட்டயப் பயிற்சி வகுப்பை இறைவார்த்தை வழிபாட்டுடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.


பணிக்குழுவின் செயலர் அருட்பணி எட்டவர் அந்தோணிராஜ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். மேலும், பயிற்சிக்கான வழிகாட்டுதல்களையும் விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, விவிலியப் பேராசிரியர் அருட்தந்தை உபால்டஸ் சுந்தர் அவர்கள் “திருவிவிலியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பினை நடத்தினார்.


இந்த மதிப்புமிக்கப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான கால அவகாசம் ஜூலை 13, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பதிவுகளைச் செய்து கொள்ளலாம். இதுவரை 51 நபர்கள் இப் பயிற்சிக்குத் பதிவு செய்துள்ளனர்.


கடந்த ஆண்டு, 116 நபர்கள் விவிலியப் பட்டயப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளது. இவ்விழா சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.


By Vox Ecclesiae

© 2025 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP